மலர்கள் எழுதாத
மடல் அவள் ...
பூக்கள் பூக்காத
புன்னைகை அவள் ...
நிலவுக்கு நிழல்
கொடுத்தாள்...
வானம்
ஆசைப்படுகிறது
அவள் மனதில்
வசமாக ....
பூக்கள்
கேட்கிறது
அவள் பார்வையில்
மலர ...
இதழ் மொழி
கண்டு வானவில்லும்
கண் சிமிட்டியது...
சாரல் மழையில்
அவள் சிரிப்பில்
கூத்தாடியது மழைத்துளி ...
மேகம்
அலைபாயும் மாலை
அவளை பார்க்க
என் கண்கள் அலைபாயுதே ...
நிலவு
தோன்றும்
இரவில் -என்
இதயத்தில் உலா
வருகிறாள் தேவதையாக ...
கனவில்
அவளை தேடும்
நான் என்னை
மறந்து விடுகிறேன் ...!
very nice
ReplyDelete