Run & Bell& snow & Song

Pages

Tuesday, December 18, 2012

இதயம்..


இதயங்களைஇருவருமே பறிமாறிகொண்டோம் 
ஆனால் 
அவள் மட்டும் திருப்பி எடுத்து 
கொண்டாள் என் அனுமதி இன்றி... 

காதல்..


என் காதலை 
வெறும் வார்த்தைகளால் 
சொல்ல முடியாது 
என்பதால்தான் 
நான் இன்னும் 
நம் காதலை 
சொல்லாமல் 
வைத்திருக்கிறேன்

Friday, December 14, 2012

பெண்....


உன்னைப் பிரித்தெடுத்து 
உலகிற்கே கவிதை சொல்வேன் 
உனக்கே கவிதை என்றால் 
நான் எங்கே செல்வேன் பெண்ணே..

பூ..


நேற்று... 
செடியில் பூத்த வாசமிக்க மலராய்... 
இன்று... 
குப்பை தொட்டியில் காய்ந்த சருகாய்.. 

Thursday, December 13, 2012

காதலி..


எனக்காக தனது காதலை... 
கண்ணீருக்குள் புதைத்த 
எனது காதலியே 
என்றும் 
மென்மையானவள்...

Tuesday, December 11, 2012

நண்பன்..


என்னருகே 
நீ வந்து அமர்ந்தாய்... 
உனை தேற்ற உன் தாய் கொடுத்த 
ஒரே ஒரு மிட்டாயையும் 
தந்தாய் 
எனை தேற்ற... 

விழி...


வானத்தையே இருகூறாய் 
பிளக்கும் உன் 
மின்னல் விழிகள்.. 
என் இதயத்தில் 
பட்டால் என்னவாகும்???... 

Sunday, December 9, 2012

பார்வை..


உன் கண்கள் வீசும் 
காந்த புயல்... 
இரும்பு துகளை 
போல் ஈர்க்கிறது 
என் இதயத்தை.....

விடுமுறை....

வானில் இருக்கும் நிலவுக்கும் 
ஒரு நாள் விடுமுறை உண்டு 
அனால் உன்னுள் இருக்கும் எனக்கு
விடுதலை இல்லை..

Saturday, December 8, 2012

நட்பு..


இதயம் வலிக்கும் போது.... 
கண்களிலிருந்து கண்ணீர் வரும் 
அது காதல் ....... 
கண்களில் கண்ணீர் வரும்போது 
இதயம் வலிக்கும் , 
அது நட்பு ......... 

இதயம்...


சத்தமில்லாமல் நீ என்னுள் 
வந்ததன் அடையாளம் தான் என்னவோ, 
சத்தமிட்டு துடிதுடிக்கறது 
ஒன்றும் தெரியாத என் 
அப்பாவி இதயம்....!!!

Friday, December 7, 2012

காதல்...


எனக்கும் அவளுக்கும் இடையில், 
புதிதாக நட்பு, காதல்
சில நாள் கழித்து மீண்டும் 
புரிந்து கொண்டேன்
அவளின் காதல் என்று...

நண்பா..


பார்க்க கண்கள் வேண்டும்
சுவாசிக்க இதயம் வேண்டும் 
நேசிக்க மனம் வேண்டும்
எனக்கு இன்னொரு ஜென்மம் வேண்டும் 
உன்னை நினைக்க நண்பா..

Thursday, December 6, 2012

நினைவு...


ஒரு வார்த்தை சொல்லிவிடு பெண்ணே
நீ என்னை காதலிக்கிறாய் என்று 
அந்த சந்தோஷத்திலே வாழ்ந்திடுவேன் 
இந்த ஜென்மத்தை உன் நினைவில் 

ரேஜா....


நீ பறித்து
உன் கூந்தலில்
சூட்டிக்கொண்டதற்க்காக
இந்த ரோஜா
புன்னகைக்கிறது
வாடியபின்பு
அதே விரல்களால்தான்
தூக்கியும் எறிவாய்
என்று தெரியாமல்..!

நீ...


மழை போல நீ எப்போதாவது தான்  
வருகிறாய் .....ஆனால் ,,,,,, 
நான் நிலம் போல காத்திருப்பேன் , 
உன் நட்புக்காக ".....!!!!!

Wednesday, December 5, 2012

காதல்..


அவளுக்கு மட்டுமே பிடித்திருக்கிறது..
யாருக்குமே பிடிக்காத  அவனை, 
காதலில் மட்டுமே இது சாத்தியம்...!!!!!

Tuesday, December 4, 2012

நட்பு...


கண்களில் கருணை பூக்க 
முகத்தில் புன்னகை பூக்க 
மனதில் மகிழ்ச்சி பூக்க 
இதயத்தில் இனிமை பூக்க 
நட்பில் நாளும் பூப்போம்..

நட்பு...


பத்துமாதம் குடியிருந்தேன்... . 
தாயின் கருவறையில்..... 
பள்ளி எனும் அறையில்... 
பலமுகங்களை கண்டேன் .... 
நட்பு எனும் மனவறையில்.... 

அழுகை...


எனக்கும் அழ தெரியும் என்று 
உன்னை 
பார்த்த பின் தான் கண்டுகொண்டேன் ..!

Monday, December 3, 2012

நட்பு...


கண்ணீர் எனக்கு பிடிக்கும் 
கவலை இருக்கும் வரை 
உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் 
உன் உயிர் பிரிந்தாலும்

இதயம்...


காதலன் இதயத்தினுள் இருப்பான்
நண்பன் இதயமாகவே இருப்பான்
நான் எப்பொழுதும் உன் இதயமாகவே.!

நண்பன்..


நண்பனே உன்னைகண்டது முதல் 
உன்னோடு பழகிய நாட்கள் சில 
ஏனோ உன்னை இன்று பிரிந்ததால் 
ஓடிவந்து உதிக்குதடா கோடி கவிதை
உன் மேல் நான் கொண்ட நட்பு

நட்பு....


அற்பமான இதயத்தின் 
எண்ணங்களையும் 
சிற்பமாக்கும், 
உண்மையான  நட்பு...